ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் அவர் மனைவி மற்றும் ஒரு மகனுடன். நல்ல சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அந்த செல்வந்தர் ஒரு நாள் காட்டுக்கு செல்ல நேரிடுகிறது.
காட்டுக்குச் சென்ற அவர் வேண்டாத செயலில் ஈடுபட்டு ஒரு முனிவரின் சாபத்துக்கு ஆளாகிறார். முனிவர் அவருக்கு இட்ட சாபமானது இன்னும் 3 மாதத்தில் பன்றியாக மாறிவிடுவாய். அந்த சாபத்துடன் வீடு திரும்பிய செல்வந்தர்.
தனது மகனையும், மனைவியையும் அழைத்து தான் காட்டில் முனிவருக்கு இழைத்த தீங்கையும், அதனால் கோபமடைந்த முனிவர் தனக்கு இட்ட சாபத்தையும், கூறிவிட்டு தன்னுடைய நிலையை நினைத்து வருந்துகிறார், எஞ்சி இருக்கும், நட்களுக்குள் அவரது கணக்கு வழக்குகள் மற்றும் இதர கடமைகளையும், முடித்துவிட்டு பன்றியாக மாறும் அந்த நாளை நோக்கி வருந்தி காத்திருந்தார்.
அவர் தனது மகனை அழைத்து, முனிவர் இட்ட சாபத்தின் படி தான் பன்றியாக மாரியவுடன், என்னை வெட்டிக்கொன்று விட வேண்டும். என்றும் ஏனென்றால் தன்னால் அந்த அருவருக்கத்தக்க உருவத்தையும்,அந்த வாழக்கையையும், வாழ முடியாது, எனவும். எனவே தான் இட்ட கட்டளையை நிறைவேற்றியே தீரவேண்டும். என்றும் மகனிடம் சத்தியம் வாங்கிவிடடு, காட்டை நோக்கி சென்றுவிடுகிறார்.
சில நாட்களில் அவர் பன்றியாகவும், மாறிவிடுகிறார்.
மகனானவன், தனது தந்தைக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்றும், பொருட்டு பன்றியாக மாறிவிட்டத் தந்தையைக் கொன்றுவிட காட்டைநோக்கிப்புறப்படுகிறான்.
காட்டில் பற்றிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு சென்று அப்பா!.. அப்பா!.. என்று அழைப்பான். அங்கிருந்த எந்த பன்றியும் அவனை நோக்கி வரவில்லை. அவனாலும் பன்றியாக இருக்கும் தனது தந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவனும் 6 மாத காலம் காட்டில் தங்கி பன்றியாக மாறிய தனது தந்தையை இடைவிடாது.தேடிக்கொண்டே இருந்தான்...
அப்படி இருக்கையில் ஒரு நாள் பக்கத்துக்காட்டில் சென்று அங்கே வசிக்கும் பன்றிக் கூட்டத்தின் நடுவே நின்று அப்பா!.. அப்பா!.. என்று அழைத்தான்.
அப்பொழுது, அவனது குரல் கேட்டு அவனை நோக்கி பன்றி ஒன்று ஓடி வந்தது... வந்த பன்றியானது! தனது தந்தை என்று கண்டுகொண்டான்.
வந்த பன்றியானது! தன் மகனைப்பார்த்து ஆனந்தத்துடன் மனைவி மகனின் நலம் விசாரித்து விட்டு ஏன் தன்னைக் காணவர இவ்வளவு நாட்கள் ஆனது என்று மகனிடம் கேட்டது.
மகனோ! நான் இந்த காட்டுக்கு வந்து 6 மாத காலம் ஆகிவிட்டது! என்றும் தங்களை காண இப்போதுதான் முடிந்தது.. என்றும் விளக்கம் அளித்தான்.
காலதாமதம் ஆகியிருந்தாலும்! தங்களுக்கு நான் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்! தந்தையே என்றான். கண்களில் கண்ணீர் வழிய!
கொஞ்சம் பொறு மகனே!
என்று கூறிவிட்டு அங்கு மேய்ந்து கொண்டிருந்த பன்றிக்கூட்டத்தின் நடுவே யாருக்கோ சைகை காட்டியது...
அப்பொழுது அவர்களை நோக்கி இன்னொறு பன்றியும், அந்தப் பன்றிக்கு பின்னாலேயே பத்து குட்டிகளும் ஓடிவந்தது.
மகனே! இவர்கள் தான் உன் சித்தியும் தம்பி,தங்கைகளும், என்று அறிமுகப்படுத்தி வைத்தார்...
நீ வர கால தாமதம் ஆனதாலும் இவள் எனக்கு ப்ரொபோஸ் செய்த விதம் புடித்துபோய் விட்டதாலும், நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு எங்களது புகழை ஓங்கச்செய்து விட்டோம்.
அதற்கு சாட்சியாக உனது தம்பி, தங்கைகளும் பிறந்து விட்டார்கள், எனவே நான் இங்கு சந்தோசமாகவும், சீரு, சிறப்புடன் வாழ்கிறேன்.
எனவே எனது சத்தியத்தை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் மகனே!
நீ வந்த வழயாகத் திரும்பிச்செல்!!!.. என்று கூறிவிட்டு தனது மனைவி மற்றும் குட்டிகளுடன் காட்டுக்குள் சென்றுவிட்டது...
(முற்றும்)
(ஒரு சூல்நிலையில் சில காலம் வாந்துவிட்டால்! அந்த சூழலுக்கு ஏற்ப மனித மனமும் மாறிவிடும்..)
நன்றி! மீண்டும் சந்திப்போம்.. அடுத்த பதிவில்
(நேரம் இருந்தால் உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்)
------------------------------------------------------------------------------------------------------------
எதுவும் சிலகாலம்!
எதுவும் மாறும்!
மாற்றம் ஒன்றே நிறந்தரம்!
மாறாதது எதுவும் இல்லை!
மாறாததுக்கு இவ்வுலகில் இடமில்லை!
காட்டுக்குச் சென்ற அவர் வேண்டாத செயலில் ஈடுபட்டு ஒரு முனிவரின் சாபத்துக்கு ஆளாகிறார். முனிவர் அவருக்கு இட்ட சாபமானது இன்னும் 3 மாதத்தில் பன்றியாக மாறிவிடுவாய். அந்த சாபத்துடன் வீடு திரும்பிய செல்வந்தர்.
தனது மகனையும், மனைவியையும் அழைத்து தான் காட்டில் முனிவருக்கு இழைத்த தீங்கையும், அதனால் கோபமடைந்த முனிவர் தனக்கு இட்ட சாபத்தையும், கூறிவிட்டு தன்னுடைய நிலையை நினைத்து வருந்துகிறார், எஞ்சி இருக்கும், நட்களுக்குள் அவரது கணக்கு வழக்குகள் மற்றும் இதர கடமைகளையும், முடித்துவிட்டு பன்றியாக மாறும் அந்த நாளை நோக்கி வருந்தி காத்திருந்தார்.
அவர் தனது மகனை அழைத்து, முனிவர் இட்ட சாபத்தின் படி தான் பன்றியாக மாரியவுடன், என்னை வெட்டிக்கொன்று விட வேண்டும். என்றும் ஏனென்றால் தன்னால் அந்த அருவருக்கத்தக்க உருவத்தையும்,அந்த வாழக்கையையும், வாழ முடியாது, எனவும். எனவே தான் இட்ட கட்டளையை நிறைவேற்றியே தீரவேண்டும். என்றும் மகனிடம் சத்தியம் வாங்கிவிடடு, காட்டை நோக்கி சென்றுவிடுகிறார்.
சில நாட்களில் அவர் பன்றியாகவும், மாறிவிடுகிறார்.
மகனானவன், தனது தந்தைக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்றும், பொருட்டு பன்றியாக மாறிவிட்டத் தந்தையைக் கொன்றுவிட காட்டைநோக்கிப்புறப்படுகிறான்.
காட்டில் பற்றிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு சென்று அப்பா!.. அப்பா!.. என்று அழைப்பான். அங்கிருந்த எந்த பன்றியும் அவனை நோக்கி வரவில்லை. அவனாலும் பன்றியாக இருக்கும் தனது தந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவனும் 6 மாத காலம் காட்டில் தங்கி பன்றியாக மாறிய தனது தந்தையை இடைவிடாது.தேடிக்கொண்டே இருந்தான்...
அப்படி இருக்கையில் ஒரு நாள் பக்கத்துக்காட்டில் சென்று அங்கே வசிக்கும் பன்றிக் கூட்டத்தின் நடுவே நின்று அப்பா!.. அப்பா!.. என்று அழைத்தான்.
அப்பொழுது, அவனது குரல் கேட்டு அவனை நோக்கி பன்றி ஒன்று ஓடி வந்தது... வந்த பன்றியானது! தனது தந்தை என்று கண்டுகொண்டான்.
வந்த பன்றியானது! தன் மகனைப்பார்த்து ஆனந்தத்துடன் மனைவி மகனின் நலம் விசாரித்து விட்டு ஏன் தன்னைக் காணவர இவ்வளவு நாட்கள் ஆனது என்று மகனிடம் கேட்டது.
மகனோ! நான் இந்த காட்டுக்கு வந்து 6 மாத காலம் ஆகிவிட்டது! என்றும் தங்களை காண இப்போதுதான் முடிந்தது.. என்றும் விளக்கம் அளித்தான்.
காலதாமதம் ஆகியிருந்தாலும்! தங்களுக்கு நான் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்! தந்தையே என்றான். கண்களில் கண்ணீர் வழிய!
கொஞ்சம் பொறு மகனே!
என்று கூறிவிட்டு அங்கு மேய்ந்து கொண்டிருந்த பன்றிக்கூட்டத்தின் நடுவே யாருக்கோ சைகை காட்டியது...
அப்பொழுது அவர்களை நோக்கி இன்னொறு பன்றியும், அந்தப் பன்றிக்கு பின்னாலேயே பத்து குட்டிகளும் ஓடிவந்தது.
மகனே! இவர்கள் தான் உன் சித்தியும் தம்பி,தங்கைகளும், என்று அறிமுகப்படுத்தி வைத்தார்...
நீ வர கால தாமதம் ஆனதாலும் இவள் எனக்கு ப்ரொபோஸ் செய்த விதம் புடித்துபோய் விட்டதாலும், நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு எங்களது புகழை ஓங்கச்செய்து விட்டோம்.
அதற்கு சாட்சியாக உனது தம்பி, தங்கைகளும் பிறந்து விட்டார்கள், எனவே நான் இங்கு சந்தோசமாகவும், சீரு, சிறப்புடன் வாழ்கிறேன்.
எனவே எனது சத்தியத்தை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் மகனே!
நீ வந்த வழயாகத் திரும்பிச்செல்!!!.. என்று கூறிவிட்டு தனது மனைவி மற்றும் குட்டிகளுடன் காட்டுக்குள் சென்றுவிட்டது...
(முற்றும்)
(ஒரு சூல்நிலையில் சில காலம் வாந்துவிட்டால்! அந்த சூழலுக்கு ஏற்ப மனித மனமும் மாறிவிடும்..)
நன்றி! மீண்டும் சந்திப்போம்.. அடுத்த பதிவில்
(நேரம் இருந்தால் உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்)
------------------------------------------------------------------------------------------------------------
எதுவும் சிலகாலம்!
எதுவும் மாறும்!
மாற்றம் ஒன்றே நிறந்தரம்!
மாறாதது எதுவும் இல்லை!
மாறாததுக்கு இவ்வுலகில் இடமில்லை!